lyricaldelights.com
கவிக்குழந்தை
காலவரை அறியாது கவிஞனின் உள்ளத்தில் கருவறை வாசம் காணும் கவிப் பொருளும் கவிஞன் ஈன்றெடுத்த மகவே.. கவிதையும் குழந்தையும் கருவில் சூல் கொண்டு கற்பனையில் உருக்கொண்டு கருவறையினைக் கிழித்தே உருவெடுக்கும்.. கவியும் குழவியும் கால மாற்றத்தில் வளரும், ஒளிரும், உரு மாறும்.. எனினும், பிறந்த சிசு கருவறைக்குள் உட் புகா.. பின் எழுதிய கவிதை மட்டும் கவியின் கருவறையில் மீண்டும் உட்புகுமோ.. கவிதையின் முற்றுப்புள்ளியே தொப்புட் கொடியின் கடைசி ஒட்டுறவு.. ஆயினும், தாய் சேய் உறவுக்கு பிறிவேது,...