[Bharathi Vasana kavidhai] Vision – Fame Part 13
இரண்டாங் கிளை: புகழ் ஞாயிறு 13 மழை பெய்கிறது. காற்றடிக்கின்றது. இடி குமுறுகின்றது. மின்னல் வெட்டுகின்றது. புலவர்களே, மின்னலைப் பாடுவோம், வாருங்கள். மின்னல் ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை -- ஒளித் தெய்வத்தின் ஒரு தோற்றம். அதனை யவனர் வணங்கி ஒளிபெற்றனர். மின்னலைத் தொழுகின்றோம். அது நம்மறிவை ஒளியுறச்செய்க. மேகக் குழந்தைகள் மின்னற்பூச் சொரிகின்றன. மின் சக்தி இல்லாத இடமில்லை. எல்லாத் தெய்வங்களும் அங்ஙனமே. கருங்கல்லிலே, வெண்மணலிலே, பச்சை இலையிலே, செம்மலரிலே, நீல மேகத்திலே, காற்றிலே, வரையிலே --...