lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 2
சக்தி முதற் கிளை: இன்பம் 2 காக்கை கத்துகிறது. ஞாயிறு வையகமாகிய கழனியில் வயிரவொளியாகிய நீர் பாய்ச்சுகிறது. அதனை மேகங்கள் வந்து மறைக்கின்றன. அஃது மேகங்களை ஊடுருவிச் செல்லுகின்றது. மேகமாகிய சல்லடையில் ஒளியாகிய புனலை வடிகட்டும் போது, மண்டி கீழும் தெளிவு மேலுமாக நிற்கின்றன. கோழி கூவுகின்றது. எறும்பு ஊர்ந்து செல்கின்றது. ஈ பறக்கின்றது. இளைஞன் சித்திரத்திலே கருத்துச் செலுத்துகிறான். இவையனைத்தும் மஹாசக்தியின் தொழில். அவள் நம்மைக் கர்ம யோகத்தில் நாட்டுக. நமக்குச் செய்கை,...