lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 3
சக்தி முதற் கிளை: இன்பம் 3 இருள் வந்தது, ஆந்தைகள் மகிழ்ந்தன. காட்டிலே காதலனை நாடிச்சென்ற ஒரு பெண் தனியே கலங்கிப் புலம்பினாள். ஒளி வந்தது; காதலன் வந்தான். பெண் மகிழ்ந்தாள். பேயுண்டு, மந்திரமுண்டு. பேயில்லை, மந்திரமுண்டு. நோயுண்டு, மருந்துண்டு. அயர்வு கொல்லும். அதனை ஊக்கம் கொல்லும். அவித்தை கொல்லும். அதனை வித்தை கொல்லும். நாம் அச்சங் கொண்டோம். தாய் அதனை நீக்கி உறுதி தந்தாள். நாம் துயர் கொண்டோம்; தாய் அதை மாற்றிக் களிப்புத் தந்தாள்;...