lyricaldelights.com
[Bharathi Vasana kavidhai] Sakthi – Happiness Part 5
5 “மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா?” போடலாம். மண்ணிலும் வானந்தானே நிரம்பி யிருக்கின்றது? மண்ணைக் கட்டினால் அதிலுள்ள வானத்தைக் கட்டியதாகாதா? உடலைக் கட்டு. உயிரைக் கட்டலாம். உயிரைக் கட்டு உள்ளத்தைக் கட்டலாம் உள்ளத்தைக் கட்டு. சக்தியைக் கட்டலாம். அநந்தசக்திக்குக் கட்டுப்படுவதிலே வருத்தமில்லை. என் முன்னே பஞ்சுத் தலையணை கிடக்கிறது. அதற்கு ஒரு வடிவம், ஓரளவு, ஒரு நியமம் ஏற்பட்டிருக்கின்றது. இந்த நியமத்தை, அழியாதபடி, சக்தி பின்னே நின்று காத்துக்கொண்டிருக்கிறாள். மனிதஜாதி இருக்குமளவும் இதே...